தமிழர் சமயம்

இந்து, இந்துக்கள், இந்துத்துவா, இந்து மதம் – ஒரு பார்வை

புனித தோமாவழித் தமிழர் சமயமே இந்து சமயம்!

கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் சீரியக் கிறிஸ்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். அதாவது, இன்றைய கேரளத்திற்கு! அவர்களிடம் தோமாவின் செய்தி இருக்கிறதா எனத் தேடிய ஐரோப்பிய அறிஞர்கள் ‘ தோமா தமிழ்நாட்டுக்கு வரவில்லை’ என்னும் முடிவுக்கு வந்தார்கள். தோமா நற்செய்திப் பணியாற்றியது தமிழ்நாட்டில்! தேட வேண்டிய இடத்தில் தேடாமல் வேறு இடத்தில் தேடினால் உண்மை எப்படி விளங்கும்?

போப் 16ஆம் ஃபிடரிக்கும் அதையே சொன்னார். இவர்கள் யாருமே தமிழ்நாட்டில் இருக்கும் ஆன்மீகக் கருத்துகளை ஆராயவேயில்லை. தோமாவின் வழி வந்தவர்கள் – அவரைப் புதைத்த இடத்தில் கட்டிய கோவிலை ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் இடித்தார்கள்.

கல்கத்தா நீதிமன்றத்தில் 1794இல் சர். வில்லியம் ஜோன்ஸ் என்னும் நீதிபதி, மனு நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து – இந்துயிசம் (Hinduism) என்னும் புதிய பெயரைக் கொடுத்தார். அது தான், இந்துத்துவா என்று இங்கு சொல்லப்படுகிறது. மனுநூல் கொள்கை என்பது மதம் அல்ல! அது சாதி ஏற்றத்தாழ்வைக் கூறும் நூல். நாங்கள் இந்துக்கள் என்று அவர்கள் சொல்வது நாங்கள் இந்தியர்கள் என்பதைத் தான் குறிக்கும். அவர்கள் இந்தியர்களா என்று கேட்டால் அதுவும் இல்லை. பிராமணர், வைசியர், சத்திரியர் மூன்றும் ஆரியர்களின் பிரிவுகள்.

இந்து:

இந்து என்னும் பெயரைப் பாரசீகர்கள் கொடுக்கிறார்கள். அவர்கள் சிந்து நதியைக் கடந்து வருகிறார்கள். சிந்து நதியை வைத்து சிந்துக்கள் என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ‘சி’ உச்சரிப்பு இல்லாததால், இந்துக்கள் என அழைக்கப்பட்டார்கள். எனவே சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்த மக்களைப் பொதுவாகக் குறிக்கும் வார்த்தை தான் இந்து என்பது! இது மதத்தைச் சொல்லும் வார்த்தை அல்ல. இடத்தைக் குறிக்கும் வார்த்தை.

இந்தியா:

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆள்வதற்கு முன் ‘இந்தியா’ என்னும் பெயரை, உலகவரலாற்றில் எங்கும் காண முடியாது.

இந்திய வழிபாடுகள்:

இந்தியாவில் இருந்த வழிபாடுகள். நினைவுக்கல் வழிபாடு, கந்து வழிபாடு என நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தவை.

இந்திய மதங்கள்:

மதம் என்றால் ஐந்து கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.
1. பிறப்புக்கு முன் நான் இருந்தேனா?
2. அப்படியானால் எப்படி இருந்தேன்?
3. இறப்புக்குப் பின் நான் இருப்பேனா?
4. இருந்தால் எப்படி இருக்க வேண்டும்?
5. இந்த உலகத்தில் நான் வாழ வேண்டிய முறை என்ன?
ஆகியவை தாம் அந்த ஐந்து கேள்விகள்.

சமணம், பெளத்தம், சைவம், வைணவம், சீக்கியம். இந்திய மதங்கள் வேறு! இந்து மதம் என்பது வேறு! அண்ணல் அம்பேத்கர் – இந்து மதத்தில் இருந்து பெளத்த மதத்திற்கு மாறினார் என்பன போன்ற செய்திகள் இந்து மதம் வேறு, பெளத்த மதம் வேறு என்பதை உணர்த்தும்.

இந்து மதம்:
சைவ, வைணவம் இரண்டின் சேர்ப்புத் தான் இந்து மதம்!

இந்துத்துவா:
ஆரிய பிராமணர்களின் வாழ்க்கை முறை. நிறவெறிக் கொள்கையை வலியுறுத்தும் வாழ்க்கை முறை. இதை வாஜ்பாயி போன்ற இந்துத்துவத் தலைவர்களே பல முறை – “Hinduism is not a religion. It is a way of life. It is nothing to do with God.” என்று சொல்லியிருக்கிறார்கள்.

சைவத்தை வளர்த்த 63 நாயன்மார்கள், வைணவத்தை வளர்த்த 12 ஆழ்வார்கள் அனைவருமே தமிழ்நாட்டில் பிறந்தவர்கள். பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆகியன தமிழ்மொழியில் தான் இருக்கின்றன. பழமையான சைவக் கோவில்கள் 280இல் 274உம், வைணவக் கோவில்கள் 108இல் 96உம் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. சைவத் தலைமைக் கோவில் சிதம்பரம், வைணவத் தலைமைக் கோவில் திருவரங்கம் ஆகியன தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. எனவே இந்து மதத்தைத் தமிழர் சமயம் என்று தான் சொல்ல முடியும்.

சமஸ்கிருதம்:

சமஸ்கிருதம் – நன்றாகச் செய்யப்பட்டது என்று அர்த்தம். அப்படியானால் செய்தது யார், எப்போது, எங்கு, எவ்வாறு? சமஸ்கிருதத்தை தோமாவழித் தமிழர் சமயத்தைச் சேர்ந்த தமிழர்கள் உருவாக்கினார்கள். கி.பி. முதல் நூற்றாண்டில் ஏற்பட்ட இயேசு பெருமானின் கருத்துகளைப் பரப்ப – ஒரு செயற்கை மொழி தேவைப்பட்டது. அதற்காக உருவாக்கப்பட்ட மொழி தான் சமஸ்கிருதம். பாரசீகம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய ஏழு மொழிகளை இணைத்து உருவாக்கினார்கள். எங்கே உருவாக்கினார்கள்? காஞ்சிபுரத்தில்!

ஐந்து மதங்கள் இந்தியாவில் தோன்றின! எப்படி இரண்டு மட்டும் இந்து மதமானது?

இந்துத்துவாவால் பாதிக்கப்பட்ட மதங்கள் சைவமும் வைணவமும்! இந்துத்துவாவால் மற்ற மதங்கள் பாதிக்கப்படவில்லை.

இந்துத்துவாவால் மற்ற இந்திய மதங்களை விடச் சைவமும் வைணவமும் பாதிப்படையக் காரணம் என்ன?

சைவமும் வைணவமும் தோமா ஆற்றிய நற்செய்திப் பணியின் விளைவாக, தமிழ்நாட்டில் உருவானவை என்று பார்த்தோம். ஆனால் பிற்காலத்தில் தமிழர்கள் ஆட்சியுரிமையை இழந்தார்கள். மூவேந்தர்களும் முடியிழந்தார்கள். பிற்காலத்தில் முகலாயர்கள், நாயக்கர்கள் என வேற்றவர்கள் ஆட்சி புரியத் தொடங்கினார்கள். வேற்றவர் ஆட்சியில் தமிழர்கள் நலிவடைந்தார்கள். தமிழர்களுடைய உயர்ந்த கொள்கைகள் நசுக்கப்பட்டன. ஒன்றே குலம்! ஒருவனே தேவன் என்னும் கொள்கைகள் நசுக்கப்பட்டு, இந்துத்துவாக் கொள்கையாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை புகுத்தப்பட்டது. இப்படித்தான்ன், சைவமும் வைணவமும் இந்துத்துவாவால் பாதிக்கப்பட்டன.

சமஸ்கிருதம் காஞ்சிபுரத்தில் உருவாக்கப்பட்டதற்குச் சான்றுகள் என்னென்ன?

இலக்கியச் சான்றுகள் உள்ளிட்ட எல்லாச் சான்றுகளும் இருக்கின்றன. காஞ்சிபுரத்தில் இருந்து தான் நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு அறிஞர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.   முதல் சைவக் கோவில் காஞ்சிபுரத்தில், முதல் வைணவக் கோவில் காஞ்சிபுரத்தில் தான்!

திருவள்ளுவர் காலம் எது?

திருவள்ளுவர் தோமாவிற்குப் பிற்காலத்தில் வந்தவர். தோமாவின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு. திருவள்ளுவர் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு.

திருவள்ளுவர் காலம் கி.மு. 31 என்று அறிஞர்கள் வரையறுத்திருக்க நீங்கள் மாற்றிச் சொல்கிறீர்களே?

சங்க இலக்கியத்தின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை. திருக்குறள் சங்க இலக்கிய நூல்களுள் ஒன்று இல்லை. அப்படியானால் திருக்குறளின் காலம் என்ன? என்று சிந்திக்க வேண்டாமா? திருக்குறள் சங்க மறுவிய காலத்தில் எழுந்த நூல். அது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று – அதாவது கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்குப் பின்னால் எழுதப்பட்ட நூல் என்று வந்து விடுகிறது அல்லவா? இது தான் ஆராய்ச்சியாளர்களின் கருத்து!

தமிழர்களின் அரசியல் வீழ்ச்சி!
நந்தனாரும் திருப்பாணாழ்வாரும் கொலை செய்யப்பட்டது ஏன்? மன்னர்களை வீழ்த்துவதற்கு பிராமணர்களின் ஆயுதம் பெண்கள். தங்கள் வீட்டுப் பெண்களுக்கு நடனம், இசை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்து மன்னர்களை வீழ்த்திய வரலாறு அவர்களுடையது. வரலாறு மட்டுமல்ல, இன்று வரை அது தான் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கேள்வி கேட்டு அவர்களுக்கே “சங்கரமடத்திற்கு 108 கேள்விகள்”, “நந்தனாரையும் திருப்பாணாழ்வாரையும் கொலை செய்தது ஏன்” ஆகிய நூல்களைப் பதிவு அஞ்சலில் எழுதி அனுப்பியிருக்கிறேன். இன்று வரை பதில் இல்லை.

நம்முடைய ஒழுக்கம், நேர்மை, கொள்கை ஆகியவற்றில் நாம் உறுதியாக இருக்கிறோம். தமிழ், தமிழன், தமிழர் சமயம் என்பது உலகிற்கே முன்மாதிரியான வாழ்க்கை! ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது நம்முடைய கொள்கை.

ஆறு கெட, நாணல் விடு என்பது பழமொழி. ஊர் கெட, நூலை விடு – அதாவது பூணூலை விடு. பூணூல் – இரு பிறப்பாளர்களுக்கு உரியது. உள்ளம் மாறிப் பிறத்தல் என்பது இரண்டாவது பிறப்பு. அது கிறிஸ்தவத்திற்கு உரியது. கிறிஸ்தவக் கொள்கையின் விளைவு. ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் நான்கிலும் பூணூல் பற்றிய குறிப்பு கிடையாது. இந்தியக் கிறிஸ்தவத்தில் பூணூல் அணியும் மரபு இருக்கிறது. ஐரோப்பிய கிறிஸ்தவத்தில் பாதிரியார்கள் நிலை உயரும் போது ஏன் நாடாக்கள் அணிகிறார்கள். இந்த மரபெல்லாம் இப்படி ஒன்றோடொன்று தொடர்புடையது.

பைபிளில் வரும் முப்புரிநூல் என்பது எதைக் குறிக்கும்?
நீங்களும் உங்கள் மனைவியும் வாழும் போது கடவுள் உங்கள் மத்தியில் வாழ வேண்டும். அது தான் முப்புரிநூல். குடும்ப ஜெபம் இல்லாத வீடு, கூரை இல்லாத வீடு.

மறுபிறப்புக்குக் கொடுப்பது தான் ஞானஸ்நானமா?
இல்லை. மறுபிறப்பு ஆன பிறகு கொடுப்பது தான் ஞானஸ்நானம்.
பிராமணர்களுக்குப் பெண்கள் போகப் பொருள். அவர்கள் பெண்களுக்கு உரிய மதிப்புக் கொடுப்பதில்லை. அவர்கள் வெளிநாட்டினர். அவர்கள் படை எடுத்து வரும்போது பெண்களை அழைத்து வரவில்லை. எனவே, நம் நாட்டுப் பெண்கள் அவர்களுக்குப் போகப் பொருள் தான்! அவர்கள் பெண்களையும் போகப் பொருளாகத் தான் பார்த்தார்கள்.

தமிழர் சமுதாயம் தாய்வழிச் சமுதாயம். எனவே, இயல்பாகவே, பெண்களை மதிக்கும் வழக்கம் இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் நம்முடைய மரபு.

கிறிஸ்தவர்கள் என்னும் பெயர் எப்படி உருவானது?
கிறிஸ்தவர்களுக்கு இப்பெயரே அந்தியோகியாவில் தான் உருவானது. எருசலேமில் உருவாகவில்லை. எருசலேமில் அவர்களுக்குச் சாட்சிகள் என்று பெயர். சாட்சி என்பதற்குத் தமிழில் சான்றோன் என்று பெயர். சான்றோன், ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் என்று தமிழ் இலக்கியங்கள் முழுக்க இப்படிப்பட்ட சான்றுகளைப் பார்க்க முடியும்.

Standard

Leave a comment