தமிழர் சமயம்

புனித தோமா இந்தியா வரவில்லையா?

புனித தோமா இந்தியா வந்தாரா?  இல்லையா?  என்னும் கேள்விகள் இருக்கின்றன.

புனித தோமா தமிழகம் வரவில்லை எனக் கத்தோலிக்கத் திருச்சபையினர் நம்புவதற்குத் தங்களுடைய (சாந்தோம்) தேவாலயம் இடிக்கப்பட்டு விடும் என்னும் தவறான நம்பிக்கையே காரணம்.

புனித தோமா தமிழகம் வந்தார். சென்னையில் 3 இடங்களில் புனித தோமா தமிழ்நாடு வந்ததற்கு அடையாளம் இருக்கிறது.
1) குத்தப்பட்ட இடம் –
2) இறந்த இடம்
3) அடக்கம் செய்யப்பட்ட இடம்

அவர் இறந்த நாளாகிய ஜூலை 3ஆம் நாள் இறந்த நாள் தோமா நினைவுநாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.

கபாலீஸ்வரர் என்பதன் பொருள் கபால மலையில் பலியான ஈசன் என்பதாகும். மத்தேயு 27:33 லூக்கா 23:33, யோவான் 19:17 மண்டையோட்டு இடம் (கொல்கதா) அல்லது கபாலஸ்தலம் என்று குறிக்கப்படுகிறது.

கி.பி. 8ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மன்னர் தோமா கோவிலைச் சிறப்பித்திருக்கிறார். மார்க்கோபோலோ தோமா கோவிலைப் பற்றி எழுதியிருக்கிறார்.

கி.பி.16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் தமிழ்க் கோவிலைப் பற்றிய சரியான புரிதலின்மையால் அக்கோவிலை இடித்தனர். 1896இல் தற்போதுள்ள சாந்தோம் பேராலயம் கட்டப்பட்டுள்ளது. போப் 16ஆம் ஆசிர்வாதப்பர் புனித தோமா இங்கு வரவில்லை என்று அறிவித்தார்.

ஏன் இந்தக் குழப்பம்?

கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்து ஆராய்ச்சி செய்யாமல், கி.பி. 4ஆம் நூற்றாண்டில் சீரியக் கிறிஸ்தவர்களை ஆராய்ச்சி செய்ததால், குழப்பம் நீடிக்கிறது.

கனானியராகிய தோமாவின் தலைமையில் சீரியர்கள் வந்தனர். இந்தத் தோமா வேறு! புனித தோமா வேறு! அவர்கள் வந்த இடம் கேரளம்! புனித தோமா வந்த இடம் தமிழகம்! இங்கே தேடாமல் அங்கே தேடினால் எப்படி உண்மை கிடைக்கும்?

போப்பாண்டவர் பதவி என்பதே அரசியல் தலைவருக்கு உரிய பதவிதான்! அவர் ஒரு நாட்டின் தலைவராகத் தான் இருக்கிறார். போப்பாண்டவர்களில் இரண்டாம் ஜான் பால் தவிர( அவரும் ஐரோப்பியர் தான்!) , மீதி அனைவரும் ரோம அரச வழி வந்தவர்கள் தான்.

புனித தோமாவின் கல்லறை இத்தாலியில் இருப்பதாகச் சொல்கிறார்களே!

இடசா என்னும் இடத்திற்கு அவருடைய எலும்பு போய் இருக்கிறது. பிறகு இத்தாலிக்கும் கொண்டு சென்றார்கள். இது தோமாவைச் சிறப்பிக்கச் செய்யப்பட்டவை தான்!

 

 

Standard

One thought on “புனித தோமா இந்தியா வரவில்லையா?

  1. Pingback: புனித தோமா தமிழகம் வந்தாரா? – கடந்தவை, நடந்தவை

Leave a comment