சமூகம்

கொரோனா – சிந்திப்போம் சில நொடிகள்!

‘வந்துட்டேன்னு சொல்லு! திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!’ இந்த வசனத்தை மட்டும் தான் இன்னும் கொரோனா சொல்லவில்லை. ஊரெங்கும் கொரோனாவைப் பற்றித் தான் பேச்சு! அண்ணாச்சிக் கடையில் இருந்து அமெரிக்கா வரை பேசுபவர்கள் எல்லாருமே – கேள்விப்பட்டீகளா? கொரோனா வந்திருச்சாமே! என்கிறார்கள்.

போன ஆண்டு கொரோனா என்று சொன்ன போது ‘கொரோனா என்றால் பலருக்கும் என்னவென்றே தெரியாது!’ முழு ஊரடங்கு தான் தீர்வு என்று நினைத்தோம். “வீட்டிலேயே இரு! விழித்திரு! தனித்திரு” என்று தமிழக முதல்வரும் சொன்னார். ஒவ்வொரு பதினைந்து நாட்களாக ஊரடங்கை நீட்டிக் கொண்டே போனார்கள். அப்போது வேறு வழியில்லை! ஏனென்றால் கொரோனா என்றால் என்னவென்றே தெரியாது! பல நாடுகளில் கொரோனாவால் பலர் இறந்து போனதாகச் செய்தித்தாள்கள் தெரிவித்தன.

ஊரடங்குக்குப் பிறகு அதிகமான நோய்ப்பரவல்:

ஆனால், இந்த ஆண்டு நிலை அப்படிப்பட்டதில்லை. ஊரடங்கு வந்த பிறகு தான், கொரோனா அதிகமானது என்பதும்

ஊரடங்கு போடப் போட கூடிய கொரோனா

நன்றி: நிர்மல், இன்போசீட்ஸ்

ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்ட தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் நாட்களில் கொரோனாவின் தீவிரம் குறைந்திருந்தது என்பதும் ஊரறிந்த ரகசியம். அதனால் தானோ என்னவோ, பிரதமரே கூட, ‘பொது ஊரடங்கு தீர்வில்லை’ என்று இப்போது பேசுகிறார்.

ஆனால், தமிழக அரசு அதிகாரிகளோ பிரதமர் பேசியதற்கு மாறாக, வேறு ராகம் பாடுகிறார்கள்.

ஊரடங்கு இல்லை – பிரதமர் மோடி

(இணைப்பு: https://www.wionews.com/india-news/no-lockdown-pm-modis-address-to-nation-focuses-on-vaccination-and-prevention-378866)

தடுப்பூசியையோ ஊரடங்கையோ பற்றி அவதூறாகப் பேசினால் வழக்குத் தொடரப்படும் என்கிறார் சென்னை மாநகராட்சி ஆணையர். இப்போது பிரதமரே ஊரடங்கு தீர்வில்லை என்று பேசியிருக்கிறாரே! அவர் மீது சென்னை மாநகராட்சி வழக்கு தொடரப் போகிறதா? இது என்ன கேலிக் கூத்து!

கொரோனாவைப் பற்றிச் சாமானியனுக்குப் பல கேள்விகள் இருக்கின்றன. அந்தக் கேள்வி ஒவ்வொன்றிலும் நியாயங்களே இல்லை என்று ஒதுக்கித் தள்ளி விட முடியாத அளவு வலுவான கேள்விகள் அவை.

ஊரடங்கு தான் தீர்வா?

ஊரடங்கால் மட்டும் தான் கொரோனா பரவாது, மக்கள் வெளியே வந்தாலே, கொரோனா பரவி விடும் என்றால்

  • ஊரடங்கு இல்லாத தீபாவளி, பொங்கல் நாட்களில் கொரோனா குறைந்தது எப்படி?
  • ஏப்ரல் மாதம் எப்படி தமிழகத் தேர்தல் பிரச்சாரத்தில் கொரோனா பரவவில்லை?
  • நேற்று வரை – உள்துறை அமைச்சர் அமித்ஷா மாபெரும் கூட்டத்தை மேற்கு வங்கத்தில் கூட்டியிருக்கிறாரே! அங்கே தானே கொரோனா உச்சத்தைத் தொட்டிருக்க வேண்டும்?
  • அதுவும் இல்லை! தேர்தலே நடக்காத மகாராஷ்டிராவில் எப்படிக் கொரோனா அதிகமாக இருக்கிறது?

இதைப் பற்றி அரசு ஏதாவது ஆராய்ச்சி நடத்தியிருக்கிறதா? ஒன்றுமில்லை.

விதிப்பதும் அரசே! மீறுவதும் அரசே!

சரி! அரசு சொல்வது போல, ஊரடங்கு தான் தீர்வு என்றே வைத்துக் கொள்வோம். இங்கே நடப்பது என்ன? அரசே ஒரு பக்கம் ஊரடங்கைப் பற்றிப் பேசுகிறது. மறுபக்கம் டாஸ்மாக்கைத் திறக்கிறது. டாஸ்மாக்கோடு பாரையும் திறக்கலாம். அங்கெல்லாம் கொரோனா பரவாது. இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு – சாமானியர்கள் வெளியே எங்கும் செல்லக் கூடாது. ஆனால் இரவு 11 மணி வரை ஐ பி எல் போட்டி நடக்கலாம். இது எந்த வகையில் சேர்த்தி? ஒருபக்கம் “ஊரடங்கு ஊரடங்கு” என்று பேச வேண்டும். ஊரடங்கை விமர்சித்தால் வழக்கு என மிரட்ட வேண்டும். இன்னொரு பக்கம் இப்படி ஊரடங்கை அரசே மீற வேண்டும். அரசு மீறினால், அதில் கொரோனா பரவாது போல!

தியேட்டர்களில் 50% (ஏசி போட்டு காற்றை அடைத்தாலும் பரவாயில்லை) பேர் படம் பார்க்கலாம். ஆனால், அதே போல, பள்ளிகளையும் கல்லூரிகளையும் 50% (காலை, மாலை என்று) கொஞ்சமாவது நடத்தலாமே என்றால் – லூசாப்பா நீ? கொரோனா பரவி விடாதா? என்று கேட்கிறார்கள்.

பேருந்துகளை இரவு நேரங்களில் இயக்காமல் நிறுத்துகிறார்கள். பேருந்துகளின் எண்ணிக்கையையும் பயண காலத்தையும் குறைப்பதால் தானே மக்கள் ஒரே நேரத்தில் பயணிக்கும் நெருக்கடி உண்டாகிறது? மக்கள் கூடுகை தான் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் பேருந்துகளின் எண்ணிக்கையைக் கூட்டுவது தானே தீர்வு? அதற்கு நேர் எதிராகக் குறைப்பது எப்படித் தீர்வாகும்?

சரி! பேருந்துகள் ஓடாது என்பதையும் தீர்வு என்றே வைத்துக் கொள்வோம். அதே இரவு நேரத்தில் தொடர்வண்டிகள் ஓடுகின்றன. அதிலும் ஏசி கோச்சுகளும் இருக்கின்றன. வேகமாக ஓடும் டிரெயினைப் பார்த்தால் கொரோனா அண்டாதா என்ன?

ஞாயிறு முழு ஊரடங்கு என்று அரசே அறிவிக்கிறது. அதே ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரயில்கள் ஓடும் என்றும் அதே அரசே அறிவிக்கிறது. இப்போது முழு ஊரடங்கை மீறுவது அரசா? மக்களா?

முமு ஊரடங்கில் இரயில்கள் இயங்கினால் அது எப்படி முழு ஊரடங்கு?

இணைப்பு: https://www.maalaimalar.com/news/district/2021/04/23212716/2558337/Tamil-News-Metro-Rail-administration-announcement.vpf

முகமூடி தான் தீர்வா?

முகமூடி முகமூடி என்கிறீர்களே! முகமூடி என்றால் N95 முகமூடி தான் என்று உலக சுகாதார நிறுவனம் முதலில் சொன்னது! இங்கே நானும் நீங்களும் அணிவது என்ன வகை முகமூடி? சாதாரண துணி! கொரோனா என்று அரசு சொல்வது ஒரு வைரஸ். கண்ணுக்கே தெரியாத நுண்கிருமியை ஒரு துணி எப்படித் தடுத்து நிறுத்தும்? சரி, அதையும் ஒருவகையில் ஏற்றுக் கொள்வோம். முகமூடியைத் தொடர்ந்து அணிவதால் தானே, மூச்சு சார்ந்த பிரச்சினைகள் அதிகம் வரும்? கொரோனா என்பது மூச்சு தொடர்பான ஒரு நோய் தானே! அப்படியானால் முகமூடி தானே கொரோனாவைக் கூட்டும்?

இதோ கீழே பாருங்கள் – அமெரிக்கக் கல்வி அதிகாரி பள்ளிகளில் முகமூடி கட்டாயம் இல்லை என்று சொல்லும் செய்தி!

முகமூடியால் பலன் இல்லை என்கிறார் அமெரிக்கக் கல்வி அதிகாரி

(இணைப்பு: https://www.forbes.com/sites/alisondurkee/2021/04/15/florida-education-commissioner-tells-schools-to-drop-mask-mandates-they-serve-no-remaining-good/?sh=ff2d0eb5a6fb)

சரி! முகமூடி தான் தீர்வு என்று அரசு சொல்வதையும் ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொள்வோம்.

  • தமிழகத்திலும் கேரளத்திலும் அசாமிலும் தேர்தல் நடந்த போது பேசிய தலைவர்களில் எத்தனை பேர் முகமூடி அணிந்திருந்தார்கள்?
  • அவர்களில் எத்தனை பேரிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது?

அப்படியானால் அரசே தன்னுடைய முடிவுகளை ஆள் பார்த்துத் தான் செயல்படுத்துகிறதா?

சட்டம் மக்களுக்கு மட்டும் தான் – தலைவர்களுக்கு இல்லை!

தடுப்பூசி தீர்வாகுமா?

இது தடுப்பூசியே இல்லை – வெறும் தண்ணீர்! என்று கோவக்சினும் கோவிஷீல்டும் அடித்துக் கொண்டார்கள். அது தனிக்கதை!

தடுப்பூசியா? தண்ணீரா?

(ஆதாரம் வேண்டுவோர் பாருங்கள்: https://www.hindustantimes.com/india-news/phase-3-covaxin-data-in-feb-or-march-bharat-biotech/story-QetWiqSy1ATBaKooOjWHsN.html)

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி இதயத்தில் இரத்த அடைப்பை ஏற்படுத்துகிறதே என்று அந்நிறுவனத்தைக் கேள்வி கேட்டார்கள்.

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி இரத்த அடைப்பைக் கொடுக்கும்

(இணைப்பு: https://www.bbc.com/news/world-us-canada-56733715)

‘என்னைக் குறை சொல்கிறாயே! உன் இலட்சணம் என்ன தெரியுமா? ‘ என்று நம்மூர் அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்டால் இன்னொரு கட்சியைச் சாடுவார்களே அதைப் போல, மீதி தடுப்பூசிகளால் தான் இரத்த அடைப்பு வரும் என்று ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ கதையைச் சொன்னது ஜான்சன் & ஜான்சன்.

(இணைப்பு: https://cdn.cnn.com/cnn/2021/images/04/18/jj.statement.png)

தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்னர், ஒருவரிடம் என்னென்ன நோய்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்வது தானே அடிப்படை அறிவியல்?

தடுப்பூசி போடுவதற்கு முன் உடல் பரிசோதனை தேவை – மருத்துவ நிபுணர்கள்

(இணைப்பு: https://www.newindianexpress.com/cities/bengaluru/2021/mar/12/get-antibody-tests-before-and-after-covid-19vaccine-shot-experts-2275483.html)

ஆனால் இங்கே நடந்தது என்ன? தடுப்பூசி போடுவதற்கு முன்பு எந்தச் சோதனையும் செய்யாமல் 12 கோடிப் பேருக்கு ஊசி போட்டிருக்கிறது அரசு. இதில் எத்தனை பேருக்கு என்னென்ன பக்க விளைவுகள் வந்தன? எத்தனை பேர் இறந்தார்கள் – ஏதாவது ஒரு புள்ளி விவரம் இருக்கிறதா? எந்தப் புள்ளி விவரத்தையும் வெளிவிடாத அரசை நம்புவதில் சாமானியனுக்குச் சிக்கல் இருக்கிறது தானே!

சரி, கொரோனா தடுப்பூசி என்கிறீர்களே! அது கொரோனாவைத் தடுத்து விடுமா? என்று கேட்டால் ‘அப்படியெல்லாம் சொல்ல முடியாது! ஓரளவு குணப்படுத்த முடியும்’ என்கிறார்கள்.

இரண்டு தடுப்பூசிக்குப் பிறகும் இறந்து போன அரசு அதிகாரி

(இணைப்பு: https://timesofindia.indiatimes.com/india/chhattisgarh-joint-health-director-dies-of-covid-despite-taking-2-vaccine-jabs/articleshow/82075952.cms)

தடுப்பூசிக்குப் பிறகும் தொற்று – கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு

(இணைப்பு: tinyurl.com/43enpyzw)

உங்களால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தால் குணப்படுத்த முடியாத போது, சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த கபசுரக் குடிநீரை அல்லவா அரசு ஆராய்ச்சிக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். அதைத் தானே உலக அளவில் கொண்டு சென்றிருக்க வேண்டும்? அதை விட்டு விட்டு, எந்த உறுதிமொழியும் இல்லாத தடுப்பூசியைப் பற்றி ஏன் அரசு வலியுறுத்திப் பேசுகிறது?

தடுப்பூசிக்கு முன்னரே குறைந்த கொரோனா பரவல்:

Image
தடுப்பூசியால் பலனா? – படத்தைப் பார்த்தாலே தெரியும்.

(சான்று: https://github.com/owid/covid-19-data/tree/master/public/data/owid-owid-covid-data.xlsx)

தடுப்பூசிக்கு முன்னரே குறைந்த தொற்று:

சரி – தடுப்பூசி தான் தீர்வு என்பதையும் ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொள்வோம். அப்படிப்பட்ட தடுப்பூசியும் உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிக விலை என்கிறார்கள்.

உலகத்திலேயே இந்தியாவில் தான் தடுப்பூசி விலை அதிகம்:

அமெரிக்காவை விட இரண்டு மடங்கு விலை அதிகம் – இந்தியாவில்:

நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

(இணைப்பு: https://indianexpress.com/article/india/serum-institute-covishield-price-india-world-7286635/)

உலகத்திலேயே

அந்த விலையும் மத்திய அரசுக்கு மட்டும் தான்! மாநில அரசு கேட்டால் 400 ரூபாய்! மாநில அரசு ஒரு நாட்டிலும் மத்திய அரசு வேறு நாட்டிலுமா இருக்கிறது? எப்படி இருக்கிறது பாருங்கள் இந்தப் பகல் கொள்ளை!

சரி! கொரோனா தடுப்பூசி போட்டாலும் கொரோனா வருகிறதே என்று கேட்டால், கொரோனாவால் பத்தாயிரம் பேரில் ஒருவர் இறக்க வாய்ப்புண்டு, ஆனால், தடுப்பூசியால் 10 கோடிப் பேரில் ஒருவருக்குத் தான் அந்த வாய்ப்பு என்று கணக்குச் சொல்வார்கள்.

கொரோனாவே வராத ஒருவர் கூட, அரசின் வழிகாட்டுதல் படி, தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து தடுப்பூசி போட்டுக் கொள்கிறார் என்பது அரசின் வாக்குறுதியில் அவருக்கு இருக்கும் நம்பிக்கை தானே! அரசை நம்பும் அவர், ஒருவேளை உயிரிழக்க நேர்ந்தால் அரசு செய்ய வேண்டியது என்ன? குறைந்தபட்சம் நஷ்ட ஈடாவது கொடுக்க வேண்டாமா? அதுவும் கிடையாது.

சரி, அரசு சொல்வது போலப் 10 கோடியில் ஒருவர் தான் இறப்பார் என்பது அறிவியல் உண்மை என்றால், 100 கோடி பேரும் தடுப்பூசி போட்டால் கூட, பத்துப் பேர் தானே இறந்து போவார்கள். வெறும் பத்துப் பேருக்கு நஷ்ட ஈடு கொடுக்க அரசால் முடியாதா? அப்படி நஷ்ட ஈடு கொடுக்க மாட்டோம் என்று அரசு பிடிவாதமாகச் சொல்வதிலேயே அரசோ மருத்துவர்களோ சொல்லும் 10 கோடிக்கு ஒருவர் தான் என்னும் வாதம் பொய் என்று பல்லிளித்து விடுகிறது.

10 கோடியில் ஒருவர் தான் இறப்பார் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருந்தால் – காப்பீட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு திட்டங்களை அறிவித்திருப்பார்களே! அப்படியும் ஏதும் இல்லையே!

கொரோனா தடுப்புக்கான முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா காப்பீடு அறிவித்திருக்கிறார்கள். ஆனால், இன்று வரை அவர்களில் எத்தனை பேர் கொரோனாவால் இறந்தார்கள் என்பது பற்றி எந்த அதிகாரப் பூர்வத் தகவலும் கிடையாது.

முன்களப் பணியாளர்கள் இறப்பு பற்றித் தகவலே இல்லாத இந்திய அரசு

(பார்க்க: https://www.newindianexpress.com/nation/2021/apr/18/corrigendum-centre-cancels-existing-insurance-policy-for-healthcare-workers-who-succumbin-the-line-o-2291639.html)

இந்த லட்சணத்தில் பாமரனுடைய உயிருக்கு உத்தரவாதத்தை இந்த அரசு தந்து விடும் என்பது நீர் மேல் எழுத்துத் தான்!

இப்படியாக, எத்தனை கேள்விகள் கேட்டாலும் விடை இல்லை! கேட்டால் ஒரே பதில் தான் – நம்பு! அரசு சொல்வதை நம்பு! இது தான் அறிவியலா?! நம்புவது எப்படி அறிவியலாகும்? கேள்வி கேட்பதும் அதற்கு விடை தேடுவதும் தானே அறிவியல்?

ஊரடங்கையும் முகமூடியையும் தடுப்பூசியையும் ஆதரிப்பது என்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கலாம். அது நல்ல நோக்கத்திற்காகக் கூட இருக்கலாம். ஆனால், அரசின் கொள்கை முடிவை விமர்சிப்பது என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. டாஸ்மாக் நடத்துவது அரசின் கொள்கை முடிவுதான்! அதை எதிர்த்துப் பேசுவது நம்முடைய அடிப்படை உரிமை அல்லவா! அதைப் போலத் தானே தடுப்பூசியையும் முகமூடியையும் ஊரடங்கையும் எதிர்ப்பதும்! ஆதரிப்பவர்கள் எப்படிச் சமூகத்திற்காகச் சிந்திக்கிறார்களோ, அதைப் போலவே தான் எதிர்ப்பவர்களும்! இருவருக்குமே சமூக நலன் தான் முக்கியம்!

எனவே, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, கொரோனாவிற்கு எங்களிடம் மருந்து இல்லை, எங்களுடைய தடுப்பூசியும் எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்காது என்று ஆங்கில மருத்துவம் வெளிப்படையாகவே அறிவித்த பிறகும் கூட, ஹோமியோபதி, சித்தமருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர் என்று பிற மருத்துவ அறிஞர்களிடம் அரசு கலந்து பேசியதாகத் தெரியவில்லை. அவர்களுடைய கருத்துகளுக்கு உரிய மதிப்பு இருப்பதாகவும் தெரியவில்லை. வழி தெரியாமல் விழி பிதுங்கி அரசு நிற்கும் இந்தக் காலத்தில் கூட, அவர்களிடம் கலந்து பேசாமல் இருப்பது, மக்களின் உயிர் மீது அரசுக்கு அக்கறை இல்லையோ என்ற சந்தேக விதையை சாமானியனிடம் விதைத்து விடும். எல்லா நோய்களையும் விடப் பெரிய நோய், சந்தேகம் தான்! அது ஒரு முறை வந்து விட்டால் போக்குவது மிகக் கடினம். இதை அலட்சியமாக எடுத்துக் கொள்வது அரசுக்கு அழகாகத் தெரியவில்லை.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை. (திருக்குறள் 555)

பொருள்:

கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

Standard