புணர்ச்சி
அவன் ஒரு மனிதனைப் பார்த்தான்
எப்படி ‘னைப்’ வந்தது? ஐ வேற்றுமை உருபும் வல்லெழுத்தும் மிகுகிறது.
நிலைமொழி – மனிதன்
வருமொழி – பார்த்தான்
வருமொழியால் நிலைமொழி மாற்றமடைந்து மனிதனைப் என மாறுகிறது.
“மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்க ளும்
தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமை
பொருளின் பொருந்துழி நிலை வரு மொழிகள்
இயல்பு ஒடு விகாரத்து இயைவது புணர்ப்பு” (நன்னூல்)
மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்க ளும்
நிலைமொழியிலும் வருமொழியிலும் மெய்யெழுத்து அல்லது உயிரெழுத்து நிற்கலாம்.
அல்வழி வேற்றுமை – அல்வழிப் புணர்ச்சி, வேற்றுமைப்புணர்ச்சி,
இயல்பு ஒடு விகாரத்து இயைவது புணர்ப்பு – இயல்புப் புணர்ச்சி, விகாரத்துப் புணர்ச்சி
புணர்ச்சி வகை 1:
உயிர் முன் உயிர் -> யானை + ஆயிரம் = யானையாயிரம்
உயிர் முன் மெய் -> யானை + கால் = யானைக் கால்
மெய் முன் உயிர் -> யான் + ஆயிரம் = யானாயிரம்
மெய் முன் மெய் -> யான் + பெரியன் = யான்பெரியன்
புணர்ச்சி வகை 2:
வினை முன் பெயர் -> வந்தான் + முருகன்
வினை முன் வினை -> வந்தான் + சென்றான்
புணர்ச்சி வகை 3:
வேற்றுமைப் புணர்ச்சி:
ஐ ஆல் கு இன் அது கண்
மொத்தம் எட்டு வேற்றுமைகள் இருக்கின்றன. முதல், கடைசி வேற்றுமைக்கு உருபுகள் இல்லை.
“வேற்றுமை ஐ முதல் ஆறுஆம்
அல்வழி
தொழில் பண்பு உவமை உம்மை அன்மொழி எழுவாய் விளி ஈர் எச்சம் முற்று இடை உரி தழுவு தொடர் அடுக்கு என ஈர் ஏழ் ஏ
அல்வழிப் புணர்ச்சி (வேற்றுமை அல்லாத வழி புணர்ச்சி) :
தொகை நிலைத் தொடர்
தொகா நிலைத் தொடர்
தொகை நிலைத் தொடர்:
வினைத்தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, அன்மொழித் தொகை
தொகா நிலைத் தொடர்:
எழுவாய்வேற்றுமைத் தொடர்
விளிவேற்றுமைத் தொடர்
இடைச்சொல் தொடர்
உரிச்சொல் தொடர்
அடுக்குத் தொடர்
பெயரெச்சத் தொடர்
வினைமுற்று(குறிப்பு வினைமுற்று, தெரிநிலை வினை முற்று)
புணர்ச்சி – 4 Models
இயல்புப்புணர்ச்சி ->பூ+மழை = பூமழை
தோன்றல் புணர்ச்சி -> பூ+கோதை = பூங்கோதை
திரிதல் புணர்ச்சி -> வில் + கோலம் = விற்கோலம்
கெடுதல் புணர்ச்சி -> வளமை + மனை = வளமனை
“விகாரம் அனைத்தும் மேவலது இயல்பே”
விகாரம் இல்லாமல் வரக்கூடியது இயல்புப் புணர்ச்சி ஆகும்.
“தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம் மூன்றும் மொழி மூவிடத்தும் ஆகும்.”
விகாரப் புணர்ச்சியாகிய தோன்றல் திரிதல் கெடுதல் மூன்றும் மொழிக்கு முதலில் இடையில் கடையில் என எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம்.
பகுதி – 2
பொதுவான புணர்ச்சிகளைப் பேசுவோம்.
உயிர் + ஈறு + புணர்ச்சி + இயல் = உயிரீற்றுப்புணரியல்
“நிலைமொழியின் இறுதியில் உயிரெழுத்துகள் பன்னிரண்டும் நிற்றல்”
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள
“வருமொழியின் முதலில் பன்னிரண்டு உயிரெழுத்துகளும் நிற்றல்”
“வருமொழியின் முதலில் பதினெட்டு மெய்யெழுத்துகளும் நிற்றல்”
வல்லினம் – க ச ட த ப ற
மெல்லினம் – ஞ ங ண ந ம ன
இடையினம் – ய ர ல வ ழ ள
உயிரீற்றுப்புணரியல் – இயல்புப்புணர்ச்சி
நிலைமொழியின் இறுதியில் உயிரெழுத்துகள் பன்னிரண்டும் நிற்றல்
வருமொழியின் முதலில் மெய்யெழுத்துகளில் மெல்லெழுத்துகளும் இடையின எழுத்துகளும் வரும்.
மெல்லெழுத்துகளில் 3 எழுத்துகள் தாம் வரும் – ஞ், ந், ம்
விள + ஞான்றது = விளஞான்றது
எழு + ஞாயிறு = எழுஞாயிறு
விள + நீண்டது = விளநீண்டது
விள + மாண்டது = விளமாண்டது
இடையினம்
ய, வ – இரண்டு மட்டுமே மொழிக்கு முதலாக வரும்.
விள + யாப்பு = விளயாப்பு
விள + வன்மை = விளவன்மை
இயல்புப்புணர்ச்சி- 2
நிலைமொழியாக உயர்திணை பொதுப்பெயர்கள் இறுதியில் உயிரெழுத்துகள் பன்னிரண்டும் நிற்றல்
வருமொழியின் முதலில் உயர்திணைப் பெயர்களோ பொதுப் பெயர்களோ இருந்தால் எந்த வித மாற்றங்களும் இருக்காது.
இரண்டு பெயர்கள்
நம்பி + பெரியன்= நம்பி பெரியன்
தாய் + பெரியள் = தாய் பெரியள்
விகாரப் புணர்ச்சி – 3
உடம்படு மெய்
நிலைமொழி இறுதியில் உயிரெழுத்துகள் பன்னிரண்டும் நிற்றல்
வருமொழியின் முதலில் உயிரெழுத்துகள் பன்னிரண்டும் நிற்றல்
மணி + அழகிது = மணியழகிது
தீ + அழகிது = தீயழகிது
விள + அழகிது = விளவழகிது
தினை + அமைப்பு = தினையமைப்பு
சே + அடி = சேவடி
அவனே + அழகன் = அவனேயழகன்
சே + அடி = சேயடி
அவனே + அழகன் = அவனேவழகன்
நூற்பா:
இ ஈ ஐ வழி ய வும் ஏனை உயிர் வழி வ வும்
ஏ முன் இவ்விருமையும் உயிர்வரின் உடம்படுமெய் என்றாகும்.
கோ + இல் = கோவில் தான் சரி!
விகாரப் புணர்ச்சி: குற்றியலுகரப் புணர்ச்சி
நிலைமொழி இறுதியில் குற்றியலுகரம் நிற்க
வருமொழியின் முதலில் உயிரெழுத்துகள் பன்னிரண்டும்
நாகு + அரிது = நாகரிது
(உயிர் வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் விதிக்கேற்ப ‘உ’ நீங்கும்)
மெய்யெழுத்து வந்தால் (குறிப்புக்காக)
நாகு + யாது = நாகியாது
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
ய வரின் இயாம்
முற்றும் அற்று வரும். “
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்”
டற மொழிக்கு முதலில் வராது.
விள + கோடு = விளக்கோடு
விள + சிறிது = விளச்சிறிது
உயிர்முன் வல்லினம்
நிலைமொழி இறுதியில் உயிர் எழுத்து பன்னிரண்டும் நிற்றல்
வருமொழியின் முதலில் க,ச,த,ப மிகும்.
சிறப்புப் புணர்ச்சி
வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய்
ஏகலும் உரித்து அஃது ஏகினும் இயல்பே
வாழிய + கொற்றா = வாழி கொற்றா
சாவ என்மொஇ ஈற்று உயிர்மெய் சாதல்
உம் விதி
சாவ + குத்தினான் = சாக்குத்தினான்.
பல+பல = பலப்பல
பல + பல = பலபல
பல+பல = பற்பல
இதே போல் தான் சிலசிலவும்!
பல + கலை = பல்கலை
பல சில எனும் இவை தம் முன் தாம் வரின்
இயல்பு உம் மிகல் உம் அகரம் ஏக
லகரம் றகரம் ஆகல் உம் பிற வரின்
அகரம் விகற்பம் ஆகல் உம் உள பிற
ஆகாரப்புணர்ச்சி:
“குறியதன் கீழ் ஆ குறுகல்”
நிலா + அழகன் = நிலவழகன்
இகரப்புணர்ச்சி:
அன்றி இன்றி என் வினையெஞ்சு இகரம்
தொடர்பின் உள் உகரம் ஆய் வரின் இயல்பு
அன்றி + போகி = அன்று போகி
உரி வரின் நாழியின் ஈற்று உயிர்மெய் கெட
மருவும் டகரம் உரியின் வழியெ
நாழி + உரி = நாடுரி
சுவை புளி முன் இன மென்மை உம் தோன்றும்
புளி+சுவை = புளிஞ்சுவை
புளி + சாதம் = புளிஞ்சாதம்
உகரப் புணர்ச்சி:
மூன்று ஆறு உருபு எண் வினைத்தொகை சுட்டு ஈறு
ஆகும் உகரம் முன்னர் இயல்பு
வேற்றுமை உருபுகள் – மூன்றாம் வேற்றுமை உருபு – ஒடு
சாத்தனொடு + கொண்டான் = சாத்தனொடு கொண்டான்
ஆறாம் வேற்றுமை உருபு – அது
சாத்தனது + கை = சாத்தனது கை
எண்ணுப்பெயர் புணர்ச்சியில்
ஒரு + கை = ஒரு கை
அடு + களிறு = அடுகளிறு
அது + பெரிது = அது பெரிது
சாத்தனது + கை = சாத்தனது கை
வன்தொடர் அல்லன முன் மிகா அல்வழி
வன்தொடர் குற்றியலுகரத்தில் மிகாது.
ஆறு + தலை = ஆறுதலை
எஃகு + பெரிது = எஃகு பெரிது
இடை தொடர் ஆய்த தொடர் ஒற்று இடையின்
மிகா நெடில் உயிர் தொடர் முன் மிகா வேற்றுமை
திசைப் பெயர் புணர்ச்சி:
திசை ஒடு திசை உம் பிற உம் சேரின்
நிலை ஈற்று உயிர்மெய் க ஒற்று நீங்கல் உம்
றகரம் ன ல ஆ திரிதல் உம் ஆம் பிற
வடக்கு + மேற்கு = வடமேற்கு
வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
தெற்கு + மேற்கு = தென்கிழக்கு
மேற்கு + கரை = மேல்கரை
கிழக்கு + காற்று = கீழ்காற்று
கிழக்கு + கரை = கீழ்கரை
எண்ணுப்பெயர் புணர்ச்சி
ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் உள்
முதல் ஈர் எண் முதல் நீளும் மூன்று ஆறு
ஏழ் குறுகும் ஆறு ஏழு அல்லவற்றின்
ஈற்று உயிர்மெய் உம் ஏழன் உயிர் உம்
ஏகும் ஏற்புழி என்மனார் புலவர்
ஒன்று + ஆயிரம் = ஓராயிரம்
இரண்டு + ஆயிரம் = ஈராயிரம்
மூன்று + தலை = முத்தலை
ஆறு + பத்து = அறுபது
ஏழு + பத்து = எழுபது
ஒன்றன் புள்ளி ரகரம் ஆக
இரண்டன் ஒற்று உயிரேக உ வரும்
ஒன்று + அலை = ஓரலை
இரண்டு + அலை = ஈரலை
மூன்றன் உறுப்பு அழிவு உம் வந்தது
மூன்று + உலகு = மூவுலகு
மூன்று + கலம் = முக்கலம்
நான்கன் மெய் ஏ ல ற ஆகும் ஏ
நான்கு + அடி = நாலடி
ஐந்தன் ஒற்று அடைவது உம் இனம் உம் கேடு உம்
ஐந்து + வகை = ஐவகை
எட்டன் உடம்பு ண ஆகும் என்ப 193
எட்டு + பத்து = எண்பது
ஒன்பான் ஒடு பத்து உம் நூறு உம் ஒன்றின்
முன்னது இன் ஏனைய முரணி ஒ ஒடு
ஒன்பது + பத்து = தொன்பது
தொன்பது + நூறு = தொண்ணூறு
முதல் இரு நான்கு ஆம் எண் முணர் பத்தில்
இடை ஒற்று ஏகல் ஆய்தம் ஆகல்
என இரு விதி உம் ஏற்கும் என்ப
ஒருபது, இருபது, முப்பது, இப்படியே எண்பது வரை.
ஒருபஃது ஆதி முன் ஒன்று முதல் ஒன்பான்
எண் உம் அவை ஊர் பிறவும் எய்தின்
ஆய்தம் அழிய ஆண்டு ஆகும்
ஒன்று + பத்து ஒன்று = ஒருபத்தொன்று
இரு+பத்து ஒன்று = இருபத்தொன்று
இரண்டு முன் வரின் பத்தின் ஈற்று உயிர்மெய்
கரந்திட ஒன்று ன ஆகும் என்ப
பத்து + இரண்டு = பன் + இரண்டு => பன்னிரண்டு
ஊகாரம்:
பூ பெயர் முன் இனமென்மையும் தோன்றும்
பூ + சோலை = பூஞ்சோலை
ஐகாரம்
பனை முன் கொடி வரின் மிகல் உம் வலி வரின்
ஐ போய் அம் உம் திரள் வரின் உறழ்வு உம்
அட்டு உறின் ஐ கெட்டு அ நீள்வு உம் ஆம் வேற்றுமை
பனை + கொடி = பனைக்கொடி
பனை + காய் = பனங்காய்
பனை + அட்டு = பனாட்டு
படிக்க வேண்டிய இணைப்பு:
http://www.tamilvu.org/courses/degree/c021/c0213/html/c0213333.htm
நன்றிக்குரியோர்:
முனைவர் மு. பழனியப்பன்
தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை அறிவியல் கல்லூரி, திருவாடனை
https://www.youtube.com/watch?v=QcpVgPkRvF4