General

நன்னூல் – உருபு புணரியல் – வகுப்பு 4 – குறிப்புகள்

முன்னூல் ஒழியப் பின்னூல் பலவினுள்

நன்னூலார் தமக்கு எந்நூலாரும்

இணையோ என்னும் துணிவே மன்னுக

– சுவாமிநாத தேசிகர்

தொல்காப்பியத்தை முன்னூலாகக் கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் நன்னூல்.

நன்னூல்:

எழுத்ததிகாரம்:

1. எண்

2. பெயர்

3. முறை

4. பிறப்பு

5. உருவம்

6. மாத்திரை

7. மொழிமுதல்

8. மொழிஈறு

9. இடைநிலை

10. போலி

ஆகிய பத்துக்கூறுகளையும் எழுத்தியல் எனலாம்.

11. எழுத்துப் புணர்ச்சி

12. பதப்புணர்ச்சி

ஆகிய இரண்டிலும் பதவியல், உயிரீற்றுப்புணரியல், மெய்யீற்றுப்புணரியல், உருபு புணரியல் ஆகியன உள்ளன.

சொல்லதிகாரம்:

நன்னூல் ஐந்து அதிகாரங்களுக்கும் எழுதப்பட்ட நூல் என அதன் சிறப்புப் பாயிரத்தில் நன்னூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் கிடைத்திருப்பது எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தான்!

உருபு புணர்ச்சி பொதுவிதி:

உருபு புணரியல் – 6 பிரிவுகள்

1. உருபு எண்ணிக்கை

2. வரும் முறை

3. பெயரும் உருபும் சேரும் போது நிகழும் மாற்றங்கள்.

4. உருபுப் புணர்ச்சியில் இடம்பெறும் சாரியைகள்

5. உருபுகளுடன் சேரும் பெயர்ச்சொற்கள்

6. புறநடை

உருபு புணரியலில் மொத்தம் பதினெட்டு நூற்பாக்கள் இருக்கின்றன.

ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என
வரு பெயர் ஐந்து ஒடு பெயர் முதல் இரு நான்கு
உருபு உம் உறழ்தர நாற்பது ஆம் உருபு ஏ

ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால் – ஐந்து பால்கள் * எட்டு உருபுகள் = நாற்பது உருபுகள்.

நம்பி(எழுவாய் வேற்றுமை) நம்பியை, நம்பியால், நம்பியோடு, நம்பியில், நம்பியது, நம்பிகண், நம்பியே(எழுவாய் வேற்றுமை)

பெயர் வழித் தம்பொருள் தரவரும் உருபே (241)

பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து தான் உருபு வரும். உருபுகளின் பொருளைத் தருவதற்காக!

புலி யானை கொன்றது

புலி யானையைக் கொன்றது – புலியை யானை கொன்றது.

வேற்றுமை உருபுகளுக்கு அல்வழிப் புணர்ச்சி கிடையாது.

சிறப்பு விதி:

ஒற்று உயிர் முதல் ஈற்று உருபுகள் புணர்ச்சியின்
ஒக்குமன் அப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே

ஒக்குமன் – என்பதால் சில இடங்களில் வேற்றுமை உருபு பொருந்தாமலும் போகலாம்.

ஐ – ஓரெழுத்து

முதல், எட்டாம் வேற்றுமை – உருபு இல்லை.

நம்பி + கண் + வாழ்வு => நம்பி கண் வாழ்வு

சாரியைகள்

பதமுன் விகுதியும் பதமும் உருபும்

புணருவழி ஒன்றும் பலவும் சாரியை

வருதலும் தவிர்தலும் விகற்பமும் ஆகும்.

பதத்திற்கு முன் விகுதி வரலாம்; பதம் வரலாம்; உருபு வரலாம். இப்படி வரும்போது ஒரு சாரியை வரலாம்; பல சாரியைகள் வரலாம்; சாரியை வராமலும் போகலாம்; சில இடங்களில் வந்தும் வராமலும் முரண்டும் போகலாம்.

பதம் + விகுதி

செய்+த்+அன்+அன் – முதல் அன் – சாரியை

பதம் முன் பதம்

புளி + பழம் => புளியம்பழம்

குளம் + கரை = குளக்கரை, குளத்துக்கரை

அவை+ஐ =அவற்றை (உருபுப் புணர்ச்சி) அற்று சாரியை வந்திருக்கிறது.

கிளி + ஐ = கிளியை

கிளி + ஐ = கிளியினை (இன் சாரியை வந்திருக்கிறது)

சாரியையின் எண்ணிக்கை:

அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம்
தம் நம் நும் ஏ அ உ ஐ கு ன
இன்ன பிற உம் பொது சாரியை ஏ

பதினோரு பதச்சாரியை, ஆறு எழுத்துச்சாரியை என பதினேழு பதச்சாரியைகள்.

ஒன்று + கூட்டம் = ஒன்றன்கூட்டம்

படை + அல் = படையல்

பல + அற்று = பலவற்றை

வண்டு+ஐ = வண்டினை

பத்து+பத்து = பதிற்றுப்பத்து (பத்து+அற்று+பத்து)

மரம் + அத்து + ஐ = மரத்தை

பனம்+காய் = பனங்காய் (பனம்+அம்+காய்)

ஒன்று + கால் = ஒன்றே கால்.

செய்+த்+அ+து = த் சாரியை

ஒன்று+கொம்பு = ஒற்றைக் கொம்பு – ஐ சாரியை.

கோ+ஐ = கோ+ன்+ஐ => கோனை (ன் சாரியை)

எல்லாம் விதி
எல்லாம் என்பது இழிதிணை ஆயின்
அற்று ஓடு உருபின் மேல் உம் உறும் ஏ
அன்றேல் நம் இடை அடைந்து அற்று ஆகும்

இழிதிணை – அஃறிணை

அஃறிணையில் வரும் எல்லாம் எனும் பெயருமிடத்து அற்றுச்சாரியை வரும; இறுதியில் முற்றும்மை வரும்.

எல்லாம் + ஓடு => எல்லா+அற்று+ஓடு+உம் => எல்லாவற்றோடும்

உயர்திணையாக இருந்தால் நம் சாரியை வரும்.

எல்லார் + ஓடு => எல்லார் + தம் +ஓடு => எல்லார்தம்மோடு

எல்லாம் சிறப்புவிதி:

எல்லாரும் எல்லீரும் என்பவற்று உம்மை

தள்ளி நிரலே தம்நும் சாரப்

புல்லும் உருபின் பின்னர் உம்மே

வேற்றுமை உருபுகள் புணருமிடத்து உம் விலகிஇறுதியில் நிற்க, இடையே முறையே தம் நும் என்னும் இரு சாரியைகள் பெற்று வரும்.

எல்லாரும் + ஐ =எல்லார் தம் + ஐ => எல்லார்தம்மையும்

தான், தாம் முதலியவற்றிற்குச் சிறப்புவிதி:

தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம்
நீ நீர் என் எம் நின் நும் ஆம் பிற
குவ்வின் அ வரும் நான்கு ஆறு இரட்டல்

தான் தாம் நாம் மூன்றும் உருபுகளுடன் புணரும்போது முதலில் உள்ள நெடில் குறுகி, தன், தம், நம் என்றும் யன், யம், நின், நும் என்றும் ஆகிவிடும்.

தான்+ஐ = தன்னை

தாம்+ஐ = தம்மை

தாம்+கு = தமக்கு

நீர் + ஐ = நும்மை

ஆ மா கோ னவ் வணையவு பெறுமே

ஆ, மா, கோ ஆகிய ஓரெழுத்து ஒருமொழி வந்து உருபு புணரும் போது ன சாரியை வரும்.

சோறும் உண்டான் – எச்ச உம்மை.

இறந்தது தழிய எச்சம்மை.

ன சாரியை வரலாம். வராமலும் இருக்கலாம்.

எண்ணுப் பெயர்களுக்குச் சிறப்பு விதி:

ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் ஊர்
பத்தின் முன் ஆன் வரின் ப ஒற்று ஒழிய மேல்
எல்லாம் ஓடும் ஒன்பது உம் இற்று ஏ

ஒன்று முதல் எட்டு வரை பத்து சேர்த்தால்

ஒன்று + பத்து = ஒருபது

இரண்டு + பத்து = இருபது

என வரும் இடங்களில் ஆன் சாரியை வந்தால், பத்தில் தகர மெய் ஒழிந்து எல்லா எழுத்தும் கெடும்.

ஒருபது +ஆன்+ஐ = ஒருபானை

ஒன்பதும் இற்றே – இந்த விதி ஒன்பதுக்கும் பொருந்தும். ஒன்பது என்பது சர்ச்சைக்குரிய எண். திருவள்ளுவர் பயன்படுத்தாத ஓர் எண் ஒன்பது.

ஒன்பது + ஆயிரம் = தொள்ளாயிரம்.

ஒன்பதுக்கு இணையாகப் பரிபாடலில் தொண்டு என்னும் சொல்லைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது பயன்பாட்டில் இல்லை.

ஒன்பது + பத்து = ஒன்பது => தொன்பது

வகர ஈற்றுச் சுட்டுப்பெயர் சிறப்புவிதி:

வ இறு சுட்டின் கு அற்று உறல் வழி ஏ

வகரத்தை ஈறாகக் கொண்டிருக்கும் சுட்டெழுத்துகள் – அவ், இவ், உவ்.

இவற்றுடன் உருபுகள் புணர்ந்தால் அற்றுச் சாரியை வரும்.

அவ்+ ஐ => அவ் + அற்று + ஐ = அவற்றை

அஃது என்பதற்குச் சிறப்பு விதி:

சுட்டின் முன் ஆய்தம் அன் வரின் கெடும் ஏ

சுட்டெழுத்து முன்னால் ஆய்தம் வந்து அன் சாரியை வந்தால் ஆய்தம் கெட்டு விடும்.

அஃது + அன்+ஐ = அதனை (ஃ ஆய்தம் கெட்டு விடும்).

அத்துச்சாரியை சிறப்புவிதி:

அத்தின் அகரம் அகர முனை இல்லை

நிலைமொழி ஈற்றில் உள்ள அகரத்தின் முன் வரும் அத்துச்சாரியை வரும் போது அத்துச்சாரியையின் அகரம் கெடும்.

மகம் + ஐ => மக + அத்து +ஐ => மக+த்து+ஐ => மகத்தை

மரம் + ஐ = மரத்தை

புறனடை – சாரியைகள்:

இதற்கு இது சாரியை எனின் அளவு இன்மையின்
விகுதி உம் பதம் உம் உருபு உம் பகுத்து இடை
நின்ற எழுத்து உம் பதம் உம் இயற்கை உம்
ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறி ஏ

புறனடை – நால்வகைப்புணர்ச்சி

விகுதி பதம் சாரியை உருபு அனைத்தின் உம்
உரைத்த விதியின் ஓர்ந்து ஒப்பன கொளல் ஏ

பதம்+விகுதி, பதம்+சாரியை, பதம்+உருபு, பதம்+பதம் என நால்வகைப் புணர்ச்சி

எந்த இடத்தில் எந்தப் புணர்ச்சி எனப் புரிந்து செயல்பட வேண்டும்.

புறனடை – இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி:

இயல்பின் விகாரம் உம் விகாரத்து இயல்பு உம்
உயர்திணை இடத்து விரிந்து உம் தொக்கு உம்
விரவுப்பெயரின் விரிந்து உம் நின்று உம்
அன்ன பிற உம் ஆகும் ஐ உருபு ஏ

மண் + குடம் = மட்குடம்

மண் + சுமந்தான் = மட்சுமந்தான் என வரவேண்டும் என்பது பொது விதி. மண் சுமந்தான் என்றும் வரலாம்.

புறனடை – மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சி

புள்ளி உம் உயிர் உம் ஆய் இறு சொல் முன்
தம்மின் ஆகிய தொழில் மொழி வரின் ஏ
வல்லினம் விகற்பம் உம் இயல்பு உம் ஆகும்

புறனடை – எழுத்ததிகாரம்:

இதன் கு இது முடிபு என்று எஞ்சாது யா உம்
விதிப்ப அளவு இன்மையின் விதித்தவற்று இயல் ஆன்
வகுத்து உரையாத உம் வகுத்தனர் கொளல் ஏ

நன்றிக்குரியோர்

முனைவர் கு.தயாநிதி

Standard

Leave a comment